×

ஆர்ப்பாட்டத்தில் தடை மீறிய 3 பேர் மீது வழக்கு

 

கோவை அக்.27: ேகாவை உக்கடம் பகுதியில் கடந்த 24ம் தேதி அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாலத்தின் மீது ஏறி 3 பேர் தடையை மீறி போராட்டம் நடத்தினர்.

ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பை சேர்ந்த சபீர் அலி, மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாஹிர், ரபீக் ஆகியோர் பொது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்து பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம நடத்தினர். இவர்கள் மீது அத்துமீறல், இடையூறு ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post ஆர்ப்பாட்டத்தில் தடை மீறிய 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Jamaat ,Yekawai Ukkadam ,Dinakaran ,
× RELATED பள்ளி வாசலில் நீர் மோர் விநியோகம்